பிரதமர் வருகை: புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு லாஸ்பேட்டை விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தமிழக சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது எனவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.