தாராவியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தாராவியிலும் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று இரட்டை இலக்கத்தை தொட்டது. அதன்படி புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் இதுவரை தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 41 ஆக அதிகரித்தது.

தாராவியில் ஜனவரி 17-ந் தேதி 10 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பிறகு பாதிப்பு ஒற்றை இலக்கத்திலும், ஒரு சில நாட்கள் தொற்று பாதிப்பு இல்லாமலும் இருந்தது. இந்தநிலையில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகப்பட்ச பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தற்போது மீண்டும் தாராவியில் பாதிப்பு அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.