செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு- அன்பில் மகேஷ்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கத் தயாராக இருக்கிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தை தொழிலாளர்கள் இந்த கொரோனா காலத்தில் வேலைக்கு சென்றிருந்தால் உடனடியாக அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.