மாநிலங்களவையில் கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு..!

கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. இன்னும் ஒரு சில நாட்களில் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறவிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் பல்வேறு காரணங்களால் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் சபை மாண்பை குலைக்கும் வகையில் எதிர்கட்சி எம்.எம்.பிக்கள் நடந்து கொண்டதால் மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு கண் கலங்கினார்.

வெங்கய்யா நாயுடு பேசிக்கொண்டிருக்கும் போதே எதிர்கட்சி எம்.பிக்கள் பாட்டுப் பாடி அமளியில் ஈடுபட்டதால் அவருடைய பேச்சு அதிகம் கேட்கவில்லை. பின்னர் சபையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.