நாமக்கலில் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று !

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன

மேலும் மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் இன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு காரணமாக மாணவர்கள் உற்சாகமாக இருந்தனர்.

இந்நிலையில்,நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும் தொற்று உறுதியாகியுள்ள மாணவி தனிமை படுத்தப்பட்டுள்ளார்.