சசிகலா தேர்தலில் போட்டியிடுவார் – டிடிவி தினகரன் !

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்கோவிலில் டி.டி.வி.தினகரன் இன்று தரிசனம் செய்தார்.பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியது,தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகும் அது எத்தனை பேரை எப்படியெல்லாம் பேச வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .

இப்போது அரசு தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். இது தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடுக்கும் நடவடிக்கையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.மிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் . அமமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் சசிகலாவின் வருகையை எதிர் நோக்கி உள்ளார்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சி கண்டிப்பாக மலரும், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது குறித்து போலீசில் புகார் செய்வதைக் கண்டு சிரிப்புதான் வருகிறது.பொதுச்செயலாளராக அவர் கொடியை பயன் படுத்தியதை யாரும் தடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.