இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்- சசிகலா

admk sasikala
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளான இன்று, அவர் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, விரைவில் மக்களையும் தொண்டர்களையும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், மீண்டும் அதிமுக ஆட்சியை உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய சசிகலா, இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மா கூறியதை நிரூபித்துக் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். திமுகதான் நமக்கு எதிரி. அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.