சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் !

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே புகார் தெரிவிக்கப்பட்டும் அவரது பெயரை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.மேலும் இந்த பெயர் நீக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலையீடு இருப்பதாக கூறினார்.