நடிகர் அக்ஷய் குமார் படப்பிடிப்பில் இருந்த 45 பேருக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்று பரவி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் இவர்களுக்கு கரோனா தொற்று வெகுவாக பரவி வருகிறது.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறியிருந்தார்.

ராம்சேது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.