வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்களுக்கு தடை !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 23 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்ற மகேஷ்குமார் அகர்வால் சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் மதுபானங்கள் விற்பனை, கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் 3,000 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.