விடுதலைக்குப் பிறகும் விக்டோரியா மருத்துவமனையிலே சசிகலா சிகிச்சை பெறவுள்ளார்..!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவந்த சசிகலாவின் தண்டனைகாலம் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 10 மணிக்கு விடுதலையாகிறார். மருத்துவர்கள் மூலம் கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை சான்றிதழ் வழங்குகின்றனர்.

விடுதலைக்கு பிறகு சசிகலாவிற்கு போடப்பட்டுவந்த காவல்துறையினரின் பாதுகாப்பு வளையம் விளக்கிக்கொள்ளப்படும். அதேபோல் சிறையில் உள்ள அவரின் உடமைகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

விடுதலைக்குப் பிறகும் விக்டோரியா மருத்துவமனையிலே சசிகலா தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார். சசிகலா இன்று விடுதலை ஆவதால், அவரின் ஆதரவாளர்கள் மிகுற்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.