மொழியை கற்பது தவறல்ல, திணிப்பது தான் தவறு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் கூடுதல் மொழியை கற்றுக்கொள்ள வலியுறுத்தலாமே தவிர திணிக்க கூடாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீட் தேர்வு தேவையில்லை என முதல்வர் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.