இவங்க தான் இனி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதா !

பிரபலமான சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான்.இந்நிலையில் திடீரென சித்ரா நேற்று முன் தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இனி சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா திரிவேதி நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்துள்ளவர்.