முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது !

மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மாவுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.இதுகுறித்து அவர் டிவீட்டரில் பதிவிட்டது “எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசானா அறிகுறிகள் இருப்பதால், வீட்டிலேயே என்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த ஐந்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தங்களது உடல்நிலையின் மீது கவனம் செலுத்தி, தேவைபட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்”.

மேகாலாய மாநிலத்தில் இன்று புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.