அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடந்தது.
சாமுவேல் கேஸிடி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக அலுவலக அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த அறையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அவர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
மெட்ரோ ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரான டப்தேஜ்தீப் சிங் உட்பட 8 ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டப்தேஜ்தீப் சிங்குக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.