பொன்மகளுக்கு வேலை கிடைச்சாச்சு..!

முதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு தனியார் நிறுவனத்தில் மாதம் 17,500 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறக்க மேட்டூர் வந்துகொண்டிருந்த பொழுது, சௌமியா எனும் இந்த சகோதரி தான் பட்டப்படிப்பு படித்து இருப்பதாகவும் தனக்கு ஏதாவது வேலை இருந்தால் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு மனுவை கொடுத்திருந்தார். அந்த மனுவுடன் தனது இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கியிருந்தார்.

இதைப்பார்த்த முதல்வர் அவருக்கு அவரது படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அந்த உறுதியின் படி தனியார் நிறுவனத்தில் மாதம் 17,500 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கான ஆணை தற்பொழுது வழங்கி உள்ளோம் என்றார்.