இரிடியம் விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றும் கும்பல் தமிழகம் முழுக்க சுற்றி வருகிறது.
இதில் ஒரு கும்பல் தான் தற்போது தூத்துக்குடியில் சிக்கியுள்ளது. ஜப்பானுக்கு அனுப்ப இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் இருப்பதாகக் கூறி, பணம் பறிக்க முயன்ற மோசடிக் கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பல் பலரை நாசம் செய்துள்ளதாக தெரிகிறது.