டெம்போவில் பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து பாலியல் வன்கொடுமை

டெல்லி நிர்பயா வன்கொடுமை போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர் பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கைராணி பகுதியில் செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலையில் பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்தனர். சாலையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்துள்ளார். அந்தப்பெண்ணை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மும்பை கைராணி பகுதியில் செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலையில் பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்தனர். சாலையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்துள்ளார். அந்தப்பெண்ணை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்தப்பெண்ணை பரிசோசித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்தப்பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனக் கூறிய மருத்துவர்கள் அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த நபர் அந்தப்பெண்ணின் பிறப்புறப்பை சேதப்படுத்தியதாக கூறி அதிர்ச்சியளித்தனர். அந்தப்பெண் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டெம்போ வாகனத்தில் இருந்து அந்தப்பெண்ணை தூக்கி எறியும் காட்சிகள் பதிவாகியிருந்தது.இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் பெயர் மோகன் சவான் (வயது 42) என்பது தெரியவந்தது.

டெம்போ வேனில் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இரும்பு ராடு கொண்டு அவரை தாக்கியதும், பிறப்புறுப்பை சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அந்த டெம்போ முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் டெம்போவை ஆய்வு செய்தனர். நடந்த சம்பவம் குறித்து அந்தப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற காவல்துறையினர் காத்திருந்த நிலையில் அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.