சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது.மேலும் நாளை முதல் பக்தர்களுக்கு இறைவனை கண்டு தரிசனம் செய்யலாம்.

மேலும் இது புரட்டாசி மாத வழிபாட்டிற்காக இந்த நடை திறப்பு செய்யப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள தேவஸ்வம் போர்டு, நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வெண்டும். மேலும் 48 மணி நேரம் முன்னர் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு கொரோனா தொற்றுக்கான நெகடிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விராத் கோலி எடுத்த அதிரடி முடிவு