ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரஷ்ய நீதிமன்றம் !

சமூகவலைத்தளமான ட்விட்டரில் மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.ரஷ்யாவின் சுமார் ஒரு கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சிப்பவர்கள், ட்விட்டரில் அதிக பதிவுகளை வெளியிடுகின்றனர்.நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி தொடர்பான பதிவுகளை நீக்காத ட்விட்டருக்கு மாஸ்கோ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ரூ.85.63 லட்சம் அபராதம் விதித்தது.

மாஸ்கோவில் உள்ள டெகான்ஸி நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ட்விட்டர்நிர்வாகத்துக்கு ரூ.1.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு நீதிமன்றம் கூறுவது,6 குற்றங்கள் தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நாங்கள் நீக்கக் கோரிய பதிவுகளில் 90 சதவீத பதிவுகளை ட்விட்டர் நீக்கிவிட்டது. எனினும் 10 சதவீத பதிவுகள் நீக்கப்படாமல் உள்ளன.