அதிரவைக்கும் கொள்ளை சம்பவம் -சீர்காழி !

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ்.அவர் சீர்காழி அடுத்த தர்மபுரம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். இன்று காலை ஆறு மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர்.

கதவை திறந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளே சென்ற வடமாநிலத்தவர்கள் தன்ராஜ் மனைவி ஆஷா ,மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.மேலும் தன்ராஜ் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். அவரது வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தன்ராஜின் காரை திருடிக் கொண்டு ஐந்து பேரும் தப்பி சென்றனர்.

இதையடுத்து, போலீசார் அங்கு வந்து விசாரணை பெற்றுக்கொண்டனர்.அவர்கள் வடமாநில கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் எருக்கூர் கிராம வயல்பகுதியல் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் தப்பியோட முயன்றபோது போலீசாரை தாக்க முயற்சித்துள்ளார். உடனே கொள்ளையனை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்றனர். மேலும் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.