கங்குலி மருத்துவமனையில் அனுமதி !

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இன்று மதியம் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் மூலம் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.