Transport fare hike: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு

கட்டணங்கள் உயர்வு
கட்டணங்கள் உயர்வு

Transport fare hike: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் பேருந்து கட்டணம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வின்னை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110 மற்றும் டீசல் ரூ.101- ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. அதனை ஈடுகட்ட பேருந்துக் கட்டணங்களை உயர்த்த பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. அதன்படி கேரளா மற்றும் ஆந்திராவில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

கேரளாவில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பேருந்து , டாக்ஸி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு மே.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 60 ஆக இருந்த டீசல் விலை, தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆந்திர மாநில போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துவாரக திருமலைராவ் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கிராமப் புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ஆரம்ப டிக்கெட்டின் விலை ரூ. 10- ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் கிலோ மீட்டருக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டீலக்ஸ் பேருந்துகளில் ரூ.5, சூப்பர் டீலக்ஸ் மற்றும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்களிலும், வேலூர், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்களிலும் இன்று முதல் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருக்கிறது. பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து டாக்சி, ஆட்டோ கட்டணங்களும் உயர்ந்துள்ளது பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: Lightning Strike: ஒரே நாளில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு