கங்கையில் மிதக்கும் சடலங்களை நீக்கும் பணி !

கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் கங்கையில் வீசப்பட்டு வருகின்றன.பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் கங்கை நதியில் கடந்த 10ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைபற்றி அடக்கம் செய்தனர்.

கங்கை நதியில் வீசப்படும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்ற கங்கை நதியில் பல்வேறு இடங்களில் இந்த வலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.