கரோனா தொற்று ஒழிய யாகம் வளர்க்க வேண்டும் – பாஜக அமைச்சர் !

கரோனா தொற்றின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க யாகம் செய்வது பலன் தரும் என்று மத்தியபிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் கூறியுள்ளார்.

இது மதவெறியோ, சடங்கோ அல்ல. ஒவ்வொருவரும் இவ்வாறு யாகம் வளர்த்தால், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவை எட்டிக்கூட பார்க்காது என்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர்.

மேலும் பாதுகாப்புப் பெற வேதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார் அமைச்சர் உஷா தாக்கூர். பசு எரு வறட்டியை நெருப்பில் இட்டு எரித்தால் 12 மணி நேரத்துக்கு வீடு தூய்மையாக இருக்கும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா கூறியிருந்தார்.