தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

30-வது நாளில் பிறை தெரிந்ததும் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி,  30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.