நாளை தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை இல்லை- மா.சுப்ரமணியன்

மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் நாளை தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை நடைபெறாது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகளில் 33 ஆக்சிஜன் வசதி கொண்டவை. அடுத்த 2 நாட்களில் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றப்படும்