Brahma kamalam: நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் மலர்..!

brahma kamalam
brahma kamalam

Brahma kamalam: பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்மகமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள், பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். இந்தப் பூ ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மலரும்.

பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும். ஒரே ஒருநாள் மட்டும் தான் பூ மலர்ந்து இருக்கும் இந்தப் பூவின் நறுமணம் பூச்செடி உள்ளபகுதி முழுவதும் வீசும் தன்மை உடையது. ஓர்க்கிட் வகையைச் சேர்ந்த இவை ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. இந்தப் பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும்.

இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும் அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதால்தான். நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல, ஒரு தட்டு அளவுக்கு மலர்கள் அமைந்திருக்கும். இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது.

அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள். இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து வருகிறார்கள். இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம் இது கள்ளி வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி வகை அல்ல.

பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை வாங்க நினைத்தால் ஒன்பது ஏழு ஒன்பது ஒன்னு எட்டு எட்டு ஆறு ரெண்டு ஒன்னு மூணு என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Long and thick hair : நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !