நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் !

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய வேளாண் சங்கங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.

பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிகைத் செய்தியாளர்களிடம் கூறியது,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் போது, வெளியே வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி எங்கள் போராட்டம் நடைபெறும்.

மிகவும் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மேலும் எங்கள் போராட்டத்தால் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.