நான் அரசியலுக்கு வரமாட்டேன் ,இதுவே என் முடிவு -ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக நிற்க போகிறார் என்று நினைத்த நிலையில் அவரது உடல்நிலை காரணமாக அரசியலை விட்டு வெளியேறுவதாக கூறினார்.

மேலும் தற்போது நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக ரஜினி அறிக்கை வாயிலாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டி அறவழியில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து ஓர் நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தியிருக்கிறார்கள்.

நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.