ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ‘பேட்’ செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது. இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து தோற்றது. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது- தமிழக அரசு