மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வெளிமாநில தொழிலாளர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது வரை சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் கரோனா பரவி வருவதால் ரயில் சேவையில் கட்டுப்பாடு விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தேவையற்ற பயணங்களையும் கூட்டமாக பயணிப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.ரயில் பயணிகள் அரசு அறிவித்தபடி இ பாஸ், இ ரிஜிஸ்டிரேஷன், பரிசோதனை போன்றவற்றை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.