3ஆவது கரோனா தடுப்பூசிக்கு அனுமதி – இந்தியா !

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.