ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் !

கரோனா தொற்று பரவல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது.மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா தொற்று மகாராஷ்டிரா,கர்நாடகா,தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பரவி வருகிறது.நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்குகளும், வார இறுதி ஊரடங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து பிரதமர் மாநில ஆளுநர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.