ராகுல் விமர்சனத்திற்கு சீதாராமன் பதில் கூறியுள்ளார்!

டெல்லில்யில் மத்திய பட்ஜெட் குறித்த பல கேள்வி சீதாராமனிடம் கேட்கப்பட்டது.ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பட்ஜெட் குறித்து, மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பதை மறந்து, இந்தியாவின் சொத்துக்களை தனது நட்பு முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறிருந்தார்.

அப்போது ராகுல் காந்தி விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.மேலும் ராகுல் கூறிய விமர்சனத்திற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை அதானி குழுமத்துக்கு காங்கிரஸ் அரசு முந்தைய கொடுத்துவிட்டது.

பெரும் பணக்காரர்களுக்கு சலுகை என்று ராகுல் 15 நாளுக்கு ஒரு முறை சொல்லிகொண்டே இருக்கிறார்.கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை அவர் சொல்கிற அதே பணக்காரர் குழுமத்துக்கு தான் கொடுத்தார்கள்.இதற்கு ராகுல் விளக்கம் அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.