ஆந்திராவில் பெண் காவலர் ஒருவருக்கு பாராட்டு !

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலறிந்த அங்கு வந்த காவல் நிலைய பெண் எஸ்.ஐ. சிரிஷா சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் மூலம் மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரச்சரில் வைத்து தனது தோளில் சுமந்தபடி இரண்டு கிலோமீட்டர் அடையாளம் தெரியாத சடலத்தை ஊருக்கு வெளியே கொண்டு வந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.