தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய ராகுல்காந்தி வருகை !

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நெருங்கும் நேரத்தில் அணைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்ய ஆயத்தமாக உள்ளனர்.தற்போது மக்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வரும் 23ம் தேதி கோவை வரும் ராகுல், அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பின்னர் அன்று சிறு, குறு தொழில் முனைவோரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கடுத்து 24 மற்றும் 25ம் தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர். திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் மூலம் செய்தி வெளிவந்துள்ளது.