ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் உயிரிழந்த பெண் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு அம்மாநில காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருவரின் வருகையை ஒட்டி ஹத்ராஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.