நாட்டின் கவனத்தை திசை திருப்ப, பிரதமர் மோடி நாடகமாடி வருகிறார்’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டில் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்’ எனப் பதிவிட்டு உள்ளார்.