டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வி !

டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் நடந்து வருகிறது.இதில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பாதையில் சென்றுகொண்டிருந்தார்.இன்று மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பி.வி. சிந்து சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்கொண்டார்.தற்போது பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

இந்தப்போட்டியில் பிவி சிந்து 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.மேலும் மற்றோரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹிபிங்கை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் எதிர் கொள்கிறார் மேலும் இது நாளை நடைபெறவுள்ளது.