புதுவையின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்றின் பரவல் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகம் காணப்பட்டது.மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகம் பரவியது.இதனை தடுக்க தமிழகம் மற்றும் புதுவையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இன்று புதுவையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட தகவலில், புதுச்சேரி மாநிலத்தில் 5,082 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 67 பேருக்கும், காரைக்காலில் 20 பேருக்கம், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,795 ஆக உள்ளது

.