திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு தடை !

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் அனைத்து கோயில்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கொரோனா ஊடரங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆடி கிருத்திகை மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.