உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு !

உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரத் சிங் ராவத், நேற்று முன்தினம் தனது பதவியை, ராஜினாமா செய்தார்.புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, பா.ஜ.க. – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக, கட்டிமா தொகுதி எம்.எல்.ஏ., புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஆளுநர் பேபி ராணி மயுராவை சந்தித்து, பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, புஷ்கர் சிங் தாமி வழங்கினார்.உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக, புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார்.