பொதுமக்கள் அனைவரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் பூரி ஜெகநாதரை தரிசிக்கலாம் !

கொரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்டிருந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் மூன்று நாள்களுக்கு டிசம்ப 23 முதல் 25 வரை கோயிலில் சேவை செய்யும் நபர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.மேலும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பூரி நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஜனவரி1, 2ஆம் தேதிகளில் கோயில் நடை மூடப்படும். ஜனவரி 3ஆம் தேதி முதல் பொதுமக்கள் வழக்கம்போல் வழிபாடு நடத்தலாம்.எனினும்,பொதுமக்கள் கட்டாயம் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.