புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி !

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.தற்போது புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதையடுத்து ராஜ்பவன் சென்று ஆளுநரை சரண்ஜித் சிங் சன்னி சந்தித்தார்.மேலும் இவர் பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இதையும் படிங்க : விருதுகளை அள்ளிச்சென்ற சூரரை போற்று திரைப்படம் !