இந்திய அளவில் புகழ்பெற்ற தேர்தல் வியுகங்களை வகுத்து தரும் நிபுணரான பிரசாஷ்ந் கிஷோரை முதன்மை தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங்.
இந்திய அரசியலில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக திகழ்பவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான வெற்றி பெற்றதற்கு பின்னர் இவரின் புகழ் ஓங்கி ஒலித்து வருகிறது.
Indian Political Action Committee (I-PAC) என்ற பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் மூலமாக தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுக்கப்படுகிறது. தற்போது இவர் தமிழகத்தில் திமுக மற்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.



