பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார் !

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.பஞ்சாப் மாநில எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அதிகரித்து வந்தது.

பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று முடிவெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.