புதுவை கட்டிடத் திறப்பு விழாவுக்கு தடை – கவர்னர் கிரண் பேடி !

புதுவை முதல்வர் நாராயண சாமி மற்றும் ஆளுநர் கிரண் பேடி இருவரும் மோதல் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும்.இது நாளுக்கு நாள் விரிவடைந்து போகிறது.இந்நிலையில் புதுவை நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியது,நகராட்சியின் கட்டிடத் திறப்பு விழாவிற்கு யாரை அழைக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தற்போது கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும் அதன் திறப்பு விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் எனக் கூறி அதன் திறப்பு விழாவை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்தியுள்ளார்.இது போன்று புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டத்திற்கு தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறினார்.