புதுவை அரசின் அதிரடி அறிவிப்பு !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

புதுவை அரசில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி,’பாண்லே’ நிறுவனத்தில் பல ஆண்டுகளாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

.5 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.176 சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.430-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.13 ஆயிரமாக கிடைக்கும்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை !