இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை நிலையற்ற வர்த்தகத்தைத் தொடர்ந்து செவ்வாயன்று அரை சதவீதம் உயர்ந்தன.

பிஎஸ்இ சென்செக்ஸ் 383 புள்ளிகள் அல்லது 0.63 சதவீதம் உயர்ந்து 61,350.26 ஆகவும், நிஃப்டி 50 0.79 சதவீதம் அல்லது 143 புள்ளிகள் அதிகரித்து 18,268 ஆக முடிந்தது.

மேலும் இன்று டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) போன்ற பங்குகள் லாபத்தில் முடிந்தன.

ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை சற்று குறைந்து காணப்பட்டன.

நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் 41,200க்கு மேல் நீடித்து 41,238.30 நிலைகளில் வர்த்தகம் முடிந்தது.